மார்ச் 08, 2016
பேங்க் ஆப் இஸ்ரேலுடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும்
மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக,
இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU)
கையெழுத்திட்டுள்ளது
இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU), “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்ற”த்திற்காக பேங்க் ஆப் இஸ்ரேலுடன் கையெழுத்திட்டுள்ளது.
பேங்க் ஆப் இஸ்ரேல் சார்பாக, வங்கிகளின் மேற்பார்வையாளர் டாக்டர் ஹெட்வா பெர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக வங்கிகள் மேற்பார்வை துறையின் முதன்மை தலைமை பொது மேலாளர் – பொறுப்பு, திருமதி பார்வதி V. சுந்தரம் அவர்களும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மேற்பார்வைத் தகவலைப் பகிர்ந்திடவும், அதிக அளவில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சில நாடுகளின் மேற்பார்வைத் துறையினரிடையே, ஒத்துழைப்பை அதிகரிக்கவும் மற்றும் மேற்பார்வை பற்றிய தகவல் பரிமாற்றத்திற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மேற்பார்வைத் துறையில் ஒத்துழைப்புக்கான கடிதம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்த்து, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 32 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒரு மேற்பார்வை ஒத்துழைப்பிற்கான கடிதம் மற்றும் ஒரு ஒத்துழைப்பு அறிக்கை ஆகியவற்றைச் செய்துள்ளது.
(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2015–16/2101 |