ஏப்ரல் 03, 2017
திரு. B.P. கனுங்கோ அவர்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் துணைஆளுநராக நியமனம்
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக திரு. B.P. கனுங்கோ அவர்கள் பொறுப்பேற்றார். மத்திய அரசாங்கம் அவரை மார்ச் 11, 2017-ந் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமித்தது. திரு. கனுங்கோ பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து அல்லது ஏப்ரல் 03, 2017 லிருந்து மூன்று ஆண்டுகளுக்கு, அல்லது மேலும் புதிய ஆணை வரும்வரை இந்த நியமனம் செல்லுபடியாகும்.
திரு. கனுங்கோ நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து துணை ஆளுநராகப் பதவி உயர்வு பெறுகிறார். துணை ஆளுநராக கீழே குறிப்பிட்டுள்ள துறைகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்கிறார். 1. பண மேலாண்மைத் துறை, 2. அந்நிய முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் துறை, 3. அரசாங்கம் மற்றும் வங்கிக் கணக்குத் துறை, 4. தகவல் தொழில்நுட்பத் துறை, 5. பட்டுவாடா மற்றும் தீர்வு முறைகள் துறை, 6. அந்நியச் செலாவணி துறை, 7. உள்ளகக் கடன் மேலாண்மைத் துறை, 8. சட்டத்துறை, 9. வங்கி வளாகத் துறை.
தொழில்முறையில் மைய வங்கியிலேயே பணியாற்றிய திரு. கனுங்கோ செப்டம்பர் 1982 இல் இந்திய ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தபின், வங்கியின் பல செயல்பாட்டுப் பகுதிகளிலியே – அதாவது, அந்நியச் செலாவணித் துறை, நிதி மேலாண்மைத் துறை, வங்கி மேலும் வங்கிசாரா மேற்பார்வைத் துறை, அரசு வங்கிக் கணக்குத் துறை, பொதுக் கடன் துறை ஆகியவற்றிலேயே இவர் பணி புரிந்துள்ளார் . ஜெய்ப்பூர், கொல்கத்தா, பிராந்திய அலுவலகங்களின் தலைமைப் பொறுப்பாளராகப் பணி புரிந்துள்ளார். மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டிஸ்கரில் வங்கிக் குறை தீர்ப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்துபோது அந்நியச் செலாவணித்துறை, உள்ளகக் கடன் மேலாண்மைத் துறை, அரசு வங்கிக் கணக்குத் துறைகளின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.
மே 05, 1959-ம் ஆண்டு பிறந்த திரு. கனுங்கோ அவர்கள் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டமும். உத்கல் பல்கலைக் கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
(ஜோஸ் J. கட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2659
|