தேதி: ஏப்ரல் 10, 2019
U.P. போஸ்டல் பிரைமரி கோ ஆபரேடிவ் ஃபாங்க் லிமிடெட், லக்னோ மீது அபராதம் விதிக்கப்பட்டது
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) பிரிவு 47 ஏ (1) c உடன் இணைந்த பிரிவு 46 (4) விதிகளின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி லக்னோவின் போஸ்டல் பிரைமரி கோ ஆபரேடிவ் ஃபாங்க் லிமிடெட் யு.பி.க்கு, ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியைப் பெறாமல் அதன் கிளையை மாற்றியதால் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ரூ1,00,000/ - (ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) பண அபராதம் விதிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு ஒரு விளக்க அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. இந்திய ரிசர்வ் வங்கி, நிகழ்வின் உண்மைகளையும், இந்த விவகாரத்திலும், தனிப்பட்ட விசாரணையிலும் வங்கியின் பதிலையும் பரிசீலித்தபின், வங்கியின் இந்த மீறல் உறுதிப்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு : 2018-2019/2420 |