மே 20, 2019
மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ஆளுநர் திரு சக்தி காந்த தாஸின் கையொப்பத்துடன் கூடிய ₹ 10 மதிப்பு ரூபாய் நோட்டுகள் வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தைக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹ 10 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வெளியிடும். இந்த நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ₹ 10 ரூபாய் நோட்டுகளோடு எல்லா வகையிலும் ஒத்திருக்கிறது. கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வழங்கிய ₹ 10 மதிப்பீட்டில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கவையாகவே தொடரும்.
யோகேஷ் தயால் தலைமைப் பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/2717
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்