ஜூலை 12, 2019
நோபல் கோ ஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், நொய்டா, (உ.பி.) – அபராதம்
விதிக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, நோபல் கோ ஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், நொய்டா (உ.பி) மீது ரூ 1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது. மோசடிகளை வகைப்படுத்தல் மற்றும் புகாரளித்தல் பற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி, நோபல் கோ ஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட்க்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/131 |