வசந்த்தாதா நகரி சஹாகரி பாங்க் லிமிடெட், ஒஸ்மானாபாத், மகாராஷ்டிரா மீது விதிக்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளின் நீட்டிப்பு |
செப்டம்பர் 18, 2019
வசந்த்தாதா நகரி சஹாகரி பாங்க் லிமிடெட், ஒஸ்மானாபாத், மகாராஷ்டிரா மீது
விதிக்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளின் நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, வசந்த்தாதா நகரி சஹாகரி பாங்க் லிமிடெட், ஒஸ்மானாபாத், மகாராஷ்டிரா -க்கு 1949-ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்(ஏஏசிஎஸ்) – இன் பிரிவு 35A இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நவம்பர் 13, 2017 அன்று வர்த்தகம் முடிவடைந்தத்திலிருந்து வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளை செப்டம்பர் 13, 2019 வரை மேலும் நீட்டிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது இந்த வழிகாட்டுதல் உத்தரவுகளை செப்டம்பர் 14 2019 முதல் அக்டோபர் 13, 2019 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த உத்தரவுகள் வைப்பு தொகையை கொடுப்பது / ஏற்றுக் கொள்வது குறித்து சில கட்டுபாடுகள் / உச்ச வரம்பை விதிக்கிறது. ஆர்வமுள்ள பொது மக்களின் பார்வைக்காக விரிவான வழிகாட்டு உத்தரவின் நகல் வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி சூழ்நிலைகளை பொறுத்து உத்தரவுகளில் மாற்றங்களை பரிசீலிக்கலாம். இந்த வழிகாட்டு உத்தரவுகளை வழங்கியதால் இந்திய ரிசர்வ் வங்கி வங்கியின் உரிமத்தை ரத்து செய்ததாகக் கருதகூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கியின் வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/724 | |