22 மே 2023
M/s ஸ்ரேஷ்தா பின்வெஸ்ட் லிமிடெட், சென்னை, தமிழ்நாடு மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
அமைப்பு ரீதியாக முக்கியத்துவமற்ற பொது வைப்புநிதி பெறாத வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) பொருந்தக்கூடிய, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை கையகப்படுத்துதல் / கட்டுப்பாட்டை மாற்றும்போது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டிய நிபந்தனை சம்பந்தமாக ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக, M/s ஸ்ரேஷ்தா பின்வெஸ்ட் லிமிடெட், சென்னை, தமிழ்நாடு (நிறுவனம்) மீது, இந்திய ரிசர்வ் வங்கி மே 18, 2023 தேதியிட்ட உத்தரவு மூலம், ₹2.00 லட்சம் (இரண்டு லட்சம் ரூபாய் மட்டும்) அபராதம் விதித்துள்ளது.
இந்த அபராதம், இந்திய ரிசர்வ் வங்கியால் முன் கூறப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததற்காக, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 பிரிவு 58G-ன் துணைப்பிரிவு (1)-ன் உட்பிரிவு (b) உடன் இணைந்த பிரிவு 58 B-ன் துணைப்பிரிவு (5)-ன் உட்பிரிவு (aa)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல.
பின்னணி
மார்ச் 24, 2022 தேதியிட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் நியமனம் குறித்த கடிதத்தை ஆய்வு செய்ததில், சுதந்திரமான இயக்குநர்கள் நீங்கலாக 30 சதவீததத்திற்கு மேலான இயக்குநர்களை என்பிஎப்சி மாற்றி நியமித்து நிர்வாகத்தை மாற்றியுள்ளதும் அவ்வாறு இயக்குநர்களை நியமிப்பதற்கு ஆர்பிஐ-ன் முன் அனுமதியை பெறவில்லையென்பதும் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக நிறுவனத்தின் மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது.
தனிப்பட்ட மற்றும் வாய்வழி சமர்ப்பிப்புகளின் பரிசீலனையில் நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்துள்ளது.
(யோகேஷ் தயாள்)
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2023-2024/264 |