Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (338.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/07/2024
தமிழ்நாடு, சிவகங்கை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிப்பு

15 ஜூலை 2024

தமிழ்நாடு, சிவகங்கை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு
வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிப்பு

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்ட்) 'மோசடிகள் - வகைப்படுத்துதல், அறிக்கை செய்தல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்கள்' தொடர்பான உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூலை 03, 2024, தேதியிட்ட உத்தரவு மூலம், தமிழ்நாடு, சிவகங்கை, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (வங்கி) மீது ₹25,000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47A(1)(c) உடன் இணைந்த பிரிவு 46(4)(i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது.

மார்ச் 31, 2023 தேதி அன்று இருந்த வங்கியின் நிதி நிலை அடிப்படையில் நபார்ட் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. நபார்ட் வங்கியின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காதது தொடர்பான மேற்பார்வை ஆய்வுகள் மற்றும் இது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், மேற்கூறப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் தனிப்பட்ட பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, வங்கி, மோசடிகளை தாமதமாக அறிக்கை செய்ததாக நபார்ட் வங்கியால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.

(புனீத் பஞ்சோலி)     
தலைமை பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2024-2025/703

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்