நவம்பர் 26, 2008
ஜகத்குரு ஸ்ரீ நாராயண குருதேவ்
புதிய துருப்பிடிக்காத 5 ரூபாய் எவர்சில்வர் நாணயங்கள்
ஜகத்குரு ஸ்ரீ நாராயண குருதேவ் அவர்களை நினைவுகூறும் வகையில் இந்திய அரசு வெளியிடும் புதிய துருப்பிடிக்காத 5 ரூபாய் எவர்சில்வர் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. அந்த நாணயங்கள் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்.
நாணயத்தின் மதிப்பு |
வடிவம் , விட்டம் மற்றும் எடை |
உலோக விகிதம் |
ஐந்து ரூபாய் |
வட்டம் - விட்டம் 23மிமீ. பாதுகாப்பு விளிம்புகளுடன்
எடை - 6 கிராம் |
துருப்பிடிக்காத எவர்சில்வர்
குரோமியம் 17%
இரும்பு 83% |
வடிவம்:
முன்புறம்: இந்த ஐந்து ரூபாய் நாணயத்தின் முகத்தில் அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இடது மேற்புறத்தில் ‘भारत’ என்று இந்தியிலும் வலது மேற்புறத்தில் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும் நாணயத்தின் மதிப்பு இலக்கம் ‘5’ என்பது சர்வதேச எண் அளவில் சிங்கமுகத்திற்கு கீழ் பொறிக்கப்பட்டிருக்கும். இடது கீழ் புறத்தில் ‘रुपये’ என்று இந்தியிலும் வல்து கீழ்புறத்தில் ‘Rupees’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தைச் சுற்றி 72 புள்ளிகள் பொறிக்கப்பட்டிருக்கும்.
பின்புறம்: ஐந்து ரூபாய் நாணயத்தில் பின்முகப்பில் ஜகத்குரு ஸ்ரீ நாராயண குருதேவ் அவர்களின் படமும் இடதுமேற்புறத்தில் जगतगुरु श्री नारायण गुरुदेव என்று இந்தியில் எழுதப்பட்டிருக்கும். வலது புறத்தில் "JAGAT GURU SREE NARAYANA GURUDEV" என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். நாணயத்தைச் சுற்றி 72 புள்ளிகள் பொறிக்கப்பட்டிருக்கும்.
ஐந்து ரூபாய் நாணயத்தில் பாதுகாப்பு விளிம்புகள்:
நாணயத்தின் விளிம்பு சுற்று வட்டத்தில் பாதுகாப்பு விளிம்பாக இருக்கும். இரண்டு பகுதிகளுக்குமிடையே விளிம்பின் மத்தியில் அலங்கரிக்கப்பட்ட மேலீடான வரித்தடம் இருக்கும். அலங்கரிக்கப்பட்ட முத்துமாலையில் ஒவ்வொரு முத்துக்குமிடையில் சாய்வுக்கோடுகள் புலப்படும். மொத்தம் 30 முத்துகளும் 30 கோடுகளும் இருக்கும்.
1906ஆம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி இந்த நாணயம் சட்டப்படி செல்லத்தக்கது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவையே.
அஜித் பிரசாத்
மேலாளர்
பத்திரிகை வெளியீடு; 2008-2009-773
|